
தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
தென் கொரியாவில் வேளை செய்யும் இலங்கை பணியாளர்களுக்கு கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
கொரியாவில் பயங்கர காட்டுத்தீ ஏற்ப்பட்டுள்ளதால் அப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.