
துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (பணிநீக்கம் ) துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று முன்தினம் (09) துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

