
பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்
அனர்த்தங்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இருப்பினும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

