
ஜனாதிபதி அமரபுர மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கை அமரபுர மகா பீடத்தின் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
வெள்ளவத்தையில் உள்ள அமரபுர மகா பீட பிக்கு தலைமையகத்திற்கு நேற்று (01) பிற்பகல் சென்ற ஜனாதிபதி, மகா நாயக்க தேரரை சந்தித்து அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார்.
செத்பிரித் பாராயணம் செய்த மகாநாயக்க தேரர், ஜனாதிபதிக்கு ஆசிவழங்கினார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

