
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பணிபுரியும் இலங்கையர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு
தற்போது நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஹெஸ்பொல்லாவின் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலீ, அஃபுலா, கார்மல் மலைகள், நாசரேத், டைபீரியாஸ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் லெபனானில் இருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டிற்குள் சில குழுக்களால் நடத்தப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று நிமல் பண்டாரா கூறினார்.
இருப்பினும், ஈரானில் இருந்து வரும் தாக்குதல்களில் குறைவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா கூறினார்.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் 9,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருவதால், அவர்கள் விழிப்புடன் இருக்கவும், நாட்டின் பாதுகாப்புப் படைகள், அரசாங்க ஊடகங்கள், PIBA மற்றும் தூதரகம் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால், நீங்கள் இலவச இஸ்ரேலிய ஆம்புலன்ஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் , மேலும் உங்கள் இருப்பிடத்துடன் 101 ஐ அழைப்பதன் மூலம் சேவையைப் பெறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

