
அசோக ரன்வலவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பந்தமான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அசோக ரன்வலவ் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இதனை கருத்தில் கொண்டு, மஹர மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

