
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை
எரிபொருள் அனுமதிப் பத்திரம் தொடர்பான QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், நிலத்தை உழுது தயார்படுத்தும் பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 20 லீட்டர் எரிபொருளும் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

