
மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” விண்ணப்ப முடிவுத் திகதி 2026 மே 15 ஆம் திகதி வரை நீடிப்பு
மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுக்கும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் – 2026” திட்டத்திற்கான விண்ணப்ப முடிவுத் திகதி, விண்ணப்பதாரர்களின் கோரிக்கைக்கு இணங்க 2026 மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் மூன்று பிரதான துறைகளின் கீழ் வழங்கப்படுகின்றன,
- தொழிற்சாலைத் துறை
இது ‘பெரிய அளவிலானவை’ மற்றும் ‘சிறிய மற்றும் நடுத்தர அளவிலானவை’ என இரண்டு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலானவை – கழிவு மேலாண்மை, இரசாயனத் தொழில்கள், வாகன சேவை மையங்கள், உணவு மற்றும் பானங்கள் உற்பத்தி, ஹோட்டல்கள், ஆடை உற்பத்தி, மருந்து உற்பத்தி, வைத்தியசாலைகள் உள்ளிட்ட 16 துறைகள் இதில் அடங்கும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலானவை – வைத்தியசாலைகள் மற்றும் அச்சிடல் துறைகளைத் தவிர ஏனைய 14 பிரிவுகள் இதில் அடங்கும்.
- திட்டத் துறை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளான ,
சிறிய நீர்மின் நிலையங்கள்
சூரிய சக்தி (தரைவழி நிறுவல்கள் மட்டும்).
காற்றாலை மின் திட்டங்கள்.
- நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகத் துறை –
இதில் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், கழிவு மேலாண்மையில் ஈடுபடும் உள்ளூராட்சி மன்றங்கள், பொலிஸ் சுற்றாடல் பிரிவுகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற 8 பிரிவுகள் அடங்கும்.
ஊடகப் பிரிவு -வெகுஜன ஊடகம் மற்றும் சமூக ஊடகம் (Facebook பக்கங்கள், YouTube சேனல்கள் உட்பட) என பிரிக்கப்பட்டுள்ளது.
விருதுகள் மற்றும் மதிப்பீடு
விருது வகைகள்: தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தகுதி விருதுகள் வழங்கப்படும்.
சிறப்பம்சம் – இந்த விருதுகளுக்கான கோப்பைகள் (Trophies) மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.
மதிப்பீடு – நிபுணர் குழுக்களால் மதிப்பீடுகள் நடத்தப்படும், அவர்களின் முடிவே இறுதியானது.
இறுதித் திகதி: மே 15, 2026.
விருது வழங்கும் விழா – 2026 அக்டோபர் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.
கருப்பொருள் – செழிப்பான தேசம், அழகான வாழ்க்கை
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

