ஆடையின்றி மோட்டார் சைக்கில் ஓட்டியவர் கைது

ஆடையின்றி மோட்டார் சைக்கில் ஓட்டியவர் கைது

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து அவரைப் பிடிக்க முயன்றனர், ஆனால் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

கேகாலை மற்றும் மாவனெல்லை பொலிஸாரும் அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை அதிகாரிகள் வீதித் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்த முடிந்தது.

கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அதனையடுத்து குறித்த இளைஞனின் மனநல மதிப்பீட்டைப் பெற அதிகாரிகள் அனுமதி கோருவார்கள்.

கண்டி பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் கடுகண்ணாவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)