
அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்
அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இன்று (12) நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இஸ்திஹார் இமாதுதீன் மூன்று வாக்குகளை அதிகமாக பெற்று அக்குரணை பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

