
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை வழங்கப்பட்டது.
அதற்கான காசோலையை இந்திய மகா போதி மன்றத்தின் இந்நாட்டு பிரதிநிதிகளான அநகாரிக தர்மபால பொறுப்பு நிதயத்தின் தலைவர் சுதம்மிக ஹேவாவிதாரண மற்றும் அமித விஜேசேகர ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.

