
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பணச்சலவை (Money Laundering) குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

