சிகிச்சை முடித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

சிகிச்சை முடித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (09) இலங்கையை வந்தடைந்தார்.

சிங்கப்பூரிலுள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில், கடந்த மார்ச் 19ஆம் திகதி அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் அங்கு தங்கி ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )