அவசரகால சட்ட நீடிப்பு ; பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

அவசரகால சட்ட நீடிப்பு ; பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகள் மூலம் அது நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பேணுவதற்கான அவசியத்தை முன்னிட்டு, இந்த தீர்மானம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சில எதிர்க்கட்சிகள் இந்த நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசரகால சட்டத்தின் தொடர்ச்சி பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கவலை வெளியிட்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )