
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்றார்.
இதன்போது, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள் தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொடை ஞானரத்ன தேரர் ஆகியோரைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

