பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ; மார்ச் 18க்கு விசாரணை

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ; மார்ச் 18க்கு விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை இந்த மாதம் 18ஆம் திகதி விசாரிக்க இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (09) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள உண்மைகளை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கை மார்ச் 18ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

இந்த மனுவில் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், இலங்கை பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கீழ் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தன்னை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அதனால், தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )